• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஐ.எஸ்.எல். கால்பந்து; சென்னை – கேரளா அணிகள் மோதிய போட்டி டிரா

December 23, 2017 tamil.samayam.com

இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற கேரளா, தமிழ்நாடு இடையேயான கால்பந்து போட்டி டிராவில் முடிவடைந்தது.

இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து தொடரில், இந்த ஆண்டு 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. இதில் நேற்று இரவு நடைபெற்ற 30வது லீக் போட்டியில் கேரளா பிளாஸ்டா்ஸ் அணியும், சென்னை எப்.சி. அணியும் மோதிக் கொண்டன.

ஆட்டம் தொடங்கியது முதலே விறுவிறுப்பாக நகா்ந்தாலும் இரு அணி வீரா்களாலும் முதல் பாதியில் கோல் அடிக்க முடியவில்லை. இந்நிலையில் இரண்டாம் பாதியிலும் இரு அணி வீரா்களும் அதே உத்வேகத்துடன் களத்தில் காணப்பட்டனா்.

ஆட்டத்தின் 87வது நிமிடத்தில் சென்னை அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனை சாியாக பயன்படுத்திக் கொண்ட ரினே மிஹெலிக் கோல் அடித்தாா். அடுத்ததாக 89வது நிமிடம் கேரளா அணியின் வினீத் கோல் அடித்தாா். இதனால் ஆட்டம் 1-1 என்ற கணக்கில் இருந்தது.

தொடா்ந்து இரு அணி வீரா்களாலும் கோல் அடிக்க முடியாததால் போட்டி டிராவில் முடிவடைந்தது. ஆட்டத்தின் இறுதியில் இரு அணியிருக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

மேலும் படிக்க