• Download mobile app
13 Mar 2026, FridayEdition - 3684
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஏலத்தில் அஸ்வினை பறிகொடுத்த சென்னை அணி ஏமாற்றத்தில் ரசிகர்கள்

January 27, 2018 தண்டோரா குழு

11 வது ஐ.பி.எல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் இன்று நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இரண்டு வருடங்களுக்கு பிறகு சென்னை, ராஜஸ்தான் அணிகள் மீண்டும் களமிறங்க உள்ளன.

இரண்டு வருடங்களுக்கு பிறகு சென்னை அணி மீண்டும் களமிறங்க உள்ளதால் சி.எஸ்.கே ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். சிஎஸ்கே ஏற்கனவே தோனி, ரெய்னா, ஜடேஜா ஆகியோரை அணியில் தக்கவைத்துக் கொண்டது. தமிழரான அஸ்வினை தக்கவக்காதால் சென்னை ஏமாற்றமடைந்தனர்.

இதையெடுத்து இன்று நடைபெறவுள்ள ஏலத்தில் சென்னை அணி அஸ்வினை வாங்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆரம்பத்தில் 2 கோடி நிர்ணயம் செய்யப்பட்ட அஸ்வினை எடுக்க சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் போட்டியிட்டனர். முடிவில் அஸ்வினை ரூ.7.60 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது.

சென்னை அணி ஏலத்தில் எடுக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் பஞ்சாப் அணி எடுத்தது சென்னை ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

மேலும் படிக்க