• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து தடுமாற்றம்

August 2, 2018 தண்டோரா குழு

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி,9 விக்கெட்டு இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்தது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி நேற்று பர்மிங்ஹாமில் துவங்கியது.டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட்,முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு துவக்க வீரர் குக் மற்றும் ஜென்னிங்ஸ் அடுத்தடுத்து வெளியேறினர்.பின்னர் களமிறங்கிய ஜோ ரூட் மற்றும் பேரிஸ்டோவ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தனர்.

ரூட் 80 ரன்கள் எடுத்த போது ரன் அவுட்டானார்.பேரிஸ்டோவ் 70 ரன்களில் வெளியேற,அடுத்து வந்த பட்லர் ‘டக்’ அவுட்டானார்.ஸ்டோக்ஸ் (21), ரசித் (13), பிராட் (1) அடுத்தடுத்து வெளியேற இறுதியில்
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில்,9 விக்கெட்டு இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்திருந்தது.

இந்திய அணி சார்பில் அஷ்வின் அதிகபட்சமாக 4 விக்கெட்டும்,ஷமி 2 விக்கெட், உமேஷ் யாதவ், இஷாந்த் ஆகியோர் தலா 1 விக்கெட் சாய்த்தனர்.

மேலும் படிக்க