• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பவுலராக முடிவு செய்தது ஏன்? சச்சின் மகன் அர்ஜூன் விளக்கம்!

January 18, 2018 tamil.samayam.com

வேகப்பந்து வீச்சாளராக முடிவு செய்தது ஏன் என ஜம்பவான் சச்சின் மகன் அர்ஜூன் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் கிளப் டி -20 போட்டிகள் நடக்கிறது. இதில் 18 வயதான இந்திய ஜாம்பவான் சச்சினின் மகன் அர்ஜூன் பங்கேற்றார். ஆஸ்திரேலிய மண்ணிலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவும் தனது தந்தை சச்சின் படைத்த சாதனைகள் போலவே அர்ஜூனும் ஆல் ரவுண்டராக அசத்தினார்.

இதற்காக இத்தொடரின் ‘டார்லிங்’ பட்டம் வழங்கப்பட்டது. இந்நிலையில் தந்தை சச்சினைப்போல பேட்ஸ்மேனாக விரும்பாமல், வேகப்பந்து வீச்சாளராக முடிவெடுத்தது ஏன் என அர்ஜூன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அர்ஜூன் கூறுகையில்,’ எனக்கு சிறுவயது முதலே வேகப்பந்து வீச்சாளராக வேண்டும் என்பதே கனவு. இந்தியாவில் வேகப்பந்து வீச்சாளர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க், இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ், இந்தியாவின் ஜாகிர் கான், பாகிஸ்தானி வாசிம் அக்ரம் ஆகியோர் தான் எனது ரோல் மாடல்கள். அதற்காக வாசிம் அக்ரம் பந்தை எப்படி பிடிப்பது, எப்படி சுவிங் செய்வது உள்ளிட்ட பல்வேறு நுணுக்கங்களை எனக்கு கற்றுக்கொடுத்துள்ளார். பந்தில் எதற்காக எச்சில் துப்புகிறார்கள், எதற்காக பேண்ட்டில் தேய்க்கிறார்கள் என பல வித்தைகளை வாசிம் எனக்கு கற்றுக்கொடுத்துள்ளார்.,’ என்றார்.

மேலும் படிக்க