இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 2 டெஸ்ட், 5 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ராஜ்கோட்டில் நேற்று துவங்கியது.
நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில், அறிமுக வீரராக களமிறங்கிய இளம் பிரித்வி ஷா (134), சதம் அடித்து கைகொடுக்க இந்திய அணி, முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 364 ரன்கள் எடுத்திருந்தது. கோலி (72), பண்ட் (17) அவுட்டாகாமல் இருந்தனர். இதையடுத்து, இரண்டாவது நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணிக்கு, கேப்டன் கோலி (139), ரவிந்திர ஜடேஜா (100*) ஆகியோர் சதம் விளாசி அசத்தினர். ரிஷ்ப் பண்ட் (92) சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
கோலியைத் தொடர்ந்து சதம் அடித்த ஜடேஜா டெஸ்ட் வாழ்வில் தன் முதல் சதத்தை அடித்தார். 132 பந்துகளில் 5 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் அவர் 100 ரன்களை எடுத்தார். அதுவும் தன் சொந்த மண்ணில் சதம் அடித்தால், அவர் சதம் அடித்த உடன் மைதானம் முழுவதும் ஆர்ப்பரித்தது. இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 649 ரன்கள் எடுத்த போது, டிக்ளேர் செய்தது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது விளையாடி வருகிறது.
குமரகுரு கல்வி நிறுவனங்களில் ‘அன்- கான்பிரான்ஸ் 2025’ எனும் தனித்துவம் கொண்ட கருத்தரங்கு நாளை துவக்கம்!
நோய் எதிர்ப்பு ஆற்றலை வலிமைப்படுத்தும் விதமாக நியூட்ரிலைட் டிரிப்பிள் புரட்டக்ட் ஆம்வே இந்தியா அறிமுகம்
ஜெம் மருத்துவமனை மற்றும் இந்திய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சங்கம் சார்பில் தேசிய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மாநாடு மற்றும் மேம்பட்ட மருத்துவ பயிற்சி
வி.ஜி.எம். அறக்கட்டளை மற்றும் கரூர் வைஸ்யா வங்கி இணைந்து அதிநவீன இரத்த வங்கியை தொடங்கியுள்ளது
சுந்தரி கிருஷ்ணகுமார் காலமானார்
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள்