• Download mobile app
30 Jun 2025, MondayEdition - 3428
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

1100வது வெற்றியை பதிவு செய்த பெடரர்!

June 22, 2017 tamilsamayam.com

ஹாலே டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் வெற்றி பெற்ற சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஏடிபி தொடரில் 1100வது வெற்றியை பதிவு செய்தார்.

சுவிட்சர்லாந்தின் முன்னணி டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர். சர்வதேச கிராண்ஸ்ட்லாம் டென்னிஸ் அரங்கில் அதிக முறை (18 முறை) பட்டம் வென்றவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். இவர் விரைவில் நடக்கும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடருக்காக தொடர்ந்து களிமண் களத்தை தவிர்த்து வந்தார்.

இந்நிலையில் விம்பிள்டன் தொடருக்கு தயாராகும் விதமாக, ஹாலேவில் நடக்கும் ஏ.டி.பி டென்னிஸ் தொடரில் பங்கேற்றுள்ளார். இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் பெடரர், ஜப்பானின் யூச்சி சுகிதாவை எதிர்கொண்டார்.

இதில் துவக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய பெடரர், முதல் இரண்டு செட்களையும், 6-3, 6-1 என மிகச்சுலபமாக கைப்பற்றி வெற்றி பெற்றார். இதன் மூலம் ஏ.டி.பி., டென்னிஸ் அரங்கில் பெடரர், தனது 1100வது வெற்றியை பதிவு செய்தார்.

மேலும் படிக்க