• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடை நீக்கம் – கேரள உயர் நீதிமன்றம்

August 7, 2017 தண்டோரா குழு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை நீக்கி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்ஸ்ரீசாந்த் கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி பிசிசிஐ அவருக்கு வாழ்நாள் தடை விதித்தது.

இதை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தஸ்ரீசாந்த் தமக்கு எதிராக டெல்லி போலீஸ் தயாரித்த அறிக்கையின் அடிப்படையில் பி.சி.சி.ஐ. வாழ்நாள் தடை விதித்தாக குற்றம்சாட்டியிருந்தார். இதனையடுத்து ஸ்ரீசாந்த் தாக்கல் செய்த வழக்கில், பி.சி.சி.ஐ.க்கு கேரள உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை நீக்கி கேரள உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

மேலும் படிக்க