• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மூன்றை நான்காக மாற்ற வேண்டும் இதைத்தான் நான் விரும்புகிறேன் – இந்திய அணிக்கு சச்சின் வேண்டுகோள்

April 2, 2019 தண்டோரா குழு

2011-ம் ஆண்டு ஏப்ரல் 2-ந்தேதி இந்திய அணி 50 ஓவர் உலகக்கோப்பையை 2-வது முறையாக கைப்பற்றிய நாள். இந்நாளில் சச்சின் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணிக்கு 2011-ம் ஆண்டு ஏப்ரல் 2-ந்தேதி மறக்க முடியாத நாளாகும். ஏனெனில் எம்எஸ் டோனியின் தலைமையில் இந்திய அணி 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பையை 28 ஆண்டுகளுக்கு பின் 2-வது முறையாக கைப்பற்றிய தினமாகும். இந்நாளில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கும் இந்திய அணிக்கு இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் தெண்டுல்கர் வீடியோ மூலம் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சச்சின் வெளியிட்ட அந்த வீடியோவில்,

‘ஒவ்வொரு நான்கு வருடத்திற்கு பிறகும் உலகக்கோப்பை தொடர் வருகிறது. இந்திய அணி கடந்த ஏப்ரல் 2011-ம் ஆண்டு ஏப்ரல் 2-ந்தேதி உலகக்கோப்பையை வென்றபின் 8 வருடங்கள் கழித்து தற்போது விளையாட இருக்கிறோம். நமது இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது எனக்குத் தெரியும். ஆனால், எந்த அணி சென்றாலும், அது நம்முடைய அணியாக இருக்கும்.

நீங்கள் கவனமாக பார்த்தீர்கள் என்றால், இந்திய வீரர்களின் ஜெர்சியில் பிசிசிஐ லோகோவின் மேல் மூன்று ஸ்டார்ஸ் இருக்கும். மூன்று ஸ்டார்ஸும் மூன்று உலகக்கோப்பையை குறிக்கும். தற்போது நாம் மூன்றை நான்காக மாற்ற வேண்டும். இதைத்தான் நான் விரும்புகிறேன். இந்த அணிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்’’ எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க