• Download mobile app
24 Apr 2024, WednesdayEdition - 2996
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மூன்றாவது டெஸ்ட்: 151 ரன்களில் சுருண்டது ஆஸ்திரேலியா

December 28, 2018 தண்டோரா குழு

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. இதில், டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது. தற்போது டெஸ்ட் தொடர் நடைப்பெற்று வருகின்றது. இத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இதன்மூலம் டெஸ்ட் தொடரில் இருஅணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலை பெற்றுள்ளது.

இருஅணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம்மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கியது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். இப்போட்டியில் முரளிவிஜய் மற்றும் கே.எல் ராகுலுக்கு பதில் ஹனுமா விஹாரியும், மயங் அகர்வாலும் துவக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி
7 விக்கெட் இழப்புக்கு 443 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. புஜாரா சதம் அடித்து அசத்தினார். ஆஸ்திரேலிய அணி சார்பில் ஸ்டார்க் 2 விக்கெட்டையும், கம்மின்ஸ் 3 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பின்னர் தங்களது முதல் இன்னிங்சை ஆஸ்திரேலிய அணி 8 ரன்கள் எடுத்த போது 2ம் நாள் ஆட்ட நேரம் முடிந்தது. 3-வது நாள் ஆட்டம் இன்று துவங்கியதும் ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன்களுக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர்.

இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய ஆஸ்திரேலிய அணி 151 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக பும்ரா 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்திய அணியைவிட ஆஸ்திரேலிய அணி 292 ரன்கள் பின் தங்கியுள்ளது. தற்போது இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது.

மேலும் படிக்க