• Download mobile app
12 Mar 2026, ThursdayEdition - 3683
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மித்தாலி ராஜுக்கு பி.எம்.டபிள்யூ கார் பரிசு

August 1, 2017 தண்டோரா குழு

இந்திய மகளீர் அணி கேப்டன் மித்தாலி ராஜுக்கு பி.எம்.டபிள்யூ கார் ஒன்றை தொழிலதிபர் பரிசாக வழங்கியுள்ளார்.

ஆந்திர பிரதேஷ் மாநிலம் ஹைதராபாத் நகரை சேர்ந்தவர் சாமுண்டேஸ்வரநாத். சமீபத்தில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த உலக கோப்பை ஐசிசி கிரிகெட் போட்டியில், இந்திய மகளிர் அணி தோல்வி அடைந்தது. ஆனால், இறுதி போட்டிவரை இந்தியாவை அழைத்து சென்ற இந்திய மகளீர் அணி கேப்டன் மித்தாலி ராஜுக்கு பாராட்டுகள் குவிந்தன.

இதையடுத்து, மித்தாலி ராஜுவை பாராட்டும் விதமாக பி.எம்.டபிள்யூ கார் ஒன்றை சாமுண்டேஸ்வரநாத் பரிசாக தந்துள்ளார்.

“இந்த மகளீர் கிரிகெட் அணி போட்டியில் நன்றாக விளையாடினார்கள். அதனால், உலக கவனம் முழுவதும் அவர்கள் மீது திரும்பியுள்ளது. நமது நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். அவர்களை நாம் உற்சாகப்படுத்த வேண்டும்” என்று சாமுண்டேஸ்வரநாத் தெரிவித்தார்.

2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெற்றிபெற்ற பாட்மிட்டன் வீராங்கனை பி.வி. சிந்து, மல்யுத்த போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற சாக்க்ஷி மாலிக், ஜிம்னாஸ்டிக் போட்டியில் வெற்றிபெற்ற தீபா கர்மர்கர், மற்றும் பாட்மிட்டன் பயிற்சியாளர் கோபிசந்த் ஆகியோருக்கும் இவர் பி.எம்.டபிள்யூ கார்களை பரிசாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க