• Download mobile app
07 May 2024, TuesdayEdition - 3009
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பி.சி.சி.ஐ தலைவராக சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்வு

October 14, 2019 தண்டோரா குழு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் வினோத் ராய் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு பிசிசிஐ எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை நிர்வகித்து வருகிறது. முறைப்படி பிசிசிஐ தலைவர் மற்றும் பிற நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் லோதா கமிஷன் பரிந்துரைப்படி வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் கடைசி நாள் இன்றுடன் நிறைவடைந்தது. ஆனால், கங்குலியை தவிர வேறு யாரும் போட்டியிட மனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து, தேர்தல் நடைபெறாமலேயே பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், முதல் தர கிரிக்கெட்டை மேலும் வலுப்படுத்த முயற்சிப்பேன். எந்த அரசியல் கட்சித்தலைவருடனும் தனக்கு தொடர்பில்லை. ஐ.பி.எல். தொடர்பான சிக்கல்களை பிசிசிஐ தலைவராக தீர்க்க முயற்சிப்பேன் என்றும் கங்குலி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க