• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நியூசிலாந்து இந்தியாவுக்கு 231 ரன்கள் இலக்கு

October 25, 2017 tamilsamayam.com

புனே ஒருநாள் போட்டியில் இந்திய பவுலர்கள் பட்டைய கிளப்ப, நியூசிலாந்து அணி பேட்டிங்கில் ஆட்டம் கண்டது. இதையடுத்து நியூசிலாந்து அணி 50 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 230 ரன்கள் எடுத்தது.

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநால் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வென்றது. இரு அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி புனேவில் இன்று நடக்கிறது.

அக்‌ஷர் வாய்ப்பு:

இதில் கட்டாய வெற்றியை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன், முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

சொதப்பல் துவக்கம்:

இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு கப்டில் (11), முன்ரோ (10), வில்லியம்சன் (3) வழக்கம் போல சொதப்பலான துவக்கம் அளித்தனர். பின் வந்த சாதனை ஜோடியான ராஸ் டெய்லர் (21), லதாம் (38) நீண்ட நேரம் தாக்குபிடிக்கவில்லை.

நழுவிய ‘ஹாட்ரிக்’:

நிகோலஸ் (42) புவனேஸ்வர் வேகத்தில் போல்லாடானார். தொடர்ந்து சகால் சுழலில் கிராண்ட்ஹோமே (41), மில்னே (0) ஆகியோர் அடுத்ததடுத்த பந்தில் வெளியேறினர். தொடர்ந்து வந்த சவுத்தி அடுத்த பந்தை தடுத்து ஆட சகாலின் ஹாட்ரிக் வாய்ப்பு பரிபோனது.

கடைசி நேரத்தில் சாண்ட்னர் (29), சவுத்தி (25*) ஆகியோர் ஓரளவு கைகொடுக்க, நியூசிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 230 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 231 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. இந்திய அணி சார்பில் புவனேஷ்வர் குமார் அதிகபட்சமாக 3 விக்கெட் கைப்பற்றினார்.

மேலும் படிக்க