நியூசிலாந்துக்கு எதிரான 4வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 92 ரன்னில் சுருண்டது
நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் முதல் மூன்று ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இதையடுத்து, இரு அணிகளுக்கிடையேயான நான்காவது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்று வருகிறது. பணிச்சுமை காரணமாக இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ரோஹித் சர்மா கேப்டனாக களமிறங்கினார். இது அவரது 200வது போட்டியாகும்.இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கனே வில்லியம்சன், பவுலிங்கை தேர்வு செய்தார். தோனி இன்று களமிறங்காத நிலையில், தினேஷ் கார்திக் அவருக்கு பதிலாக சேர்க்கப்பட்டார். அதைபோல் அறிமுக வீரர் கிரில் இன்று களமிறங்கினார்.
கடந்த போட்டிகளில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. ஷிகர் தவான் (13 ரன்கள்), ரோகித் சர்மா (7 ரன்கள்), அம்பத்தி ராயுடு (0) , தினேஷ் கார்த்திக் (0), சுப்மான் கில் (9 ரன்கள்) என மின்னல் வேகத்தில் பெவிலியன் திரும்பினர். இதனால், இந்திய அணி 13.1 ஓவர்கள் நிலவரப்படி 6 விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் சேர்த்து தடுமாறியது.
அடுத்து பாண்ட்யா 16, குல்தீப் 15 ரன்னுக்கு அவுட்டாகினர். கலீல் அகமதுவும் 5 ரன்னுக்கு போல்டாக இந்திய அணி 30.5 ஓவரில் 92 ரன்னுக்கு சுருண்டது. நியூசிலாந்து சார்பில் போல்ட் 5, கிராண்ட்ஹோம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஜூன் 22-இல் காவேரி கூக்குரல் சார்பில் மகத்தான வருமானம் தரும் மாற்று விவசாய கருத்தரங்கம்
கோவை மாவட்டம் முழுவதும் சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாம் – 679 மனுக்கள் பரிசீலனை, 518 க்கு உடனடி தீர்வு
கௌசிகா நதியை சீரமைக்க மார்ட்டின் அறக்கட்டளை சார்பில் ரூ. 50 லட்சம் நிதியுதவி
வெளிநாடுகளில் சென்று மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை அறிவித்த ஷாலோம் எஜுகேஷன்
குமரகுரு கல்வி நிறுவனங்களில் ‘அன்- கான்பிரான்ஸ் 2025’ எனும் தனித்துவம் கொண்ட கருத்தரங்கு நாளை துவக்கம்!
நோய் எதிர்ப்பு ஆற்றலை வலிமைப்படுத்தும் விதமாக நியூட்ரிலைட் டிரிப்பிள் புரட்டக்ட் ஆம்வே இந்தியா அறிமுகம்