• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நான் கிரிக்கெட் விதிகளை மீறி பட்லரை அவுட் செய்யவில்லை – அஸ்வின்

March 26, 2019 தண்டோரா குழு

நான் கிரிக்கெட் விதிகளை மீறி பட்லரை அவுட் செய்யவில்லை என பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் கூறியுள்ளார்.
கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்திருந்த 12வது ஐபிஎல் தொடர் கடந்த 23ம் தேதி சென்னையில் துவங்கியது. இந்த தொடரில் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இத்தொடரின் 4-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கியது.

ஜெய்ப்பூரில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 184 ரன் குவித்தது. பின்னர் விளையாடிய ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 170 ரன் எடுத்தது. இதனால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 14 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியின் 13-வது ஓவரில் ராஜஸ்தான் தொடக்க வீரர் ஜோஸ் பட்லரை, பஞ்சாப் கேப்டனும் தமிழகத்தை சேர்ந்தவருமான அஸ்வின் ‘ரன் அவுட்’ செய்த விதம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது சமூக வலைதளங்களில் விவாதமாகவும் மாறியுள்ளது. அஸ்வின் பந்து வீசும் போது பட்லர் கிரீசை விட்டு வெளியே நகர்ந்தார். அப்போது அஸ்வின் அவரை ‘மன்கட்’ முறையில் ‘ரன்அவுட்’ செய்தார். ஒரு பவுலர்
பந்தை வீசுவதற்கு முன்பாகவே கிரீசை விட்டு வெளியே வந்தால் ‘ரன் அவுட்’ செய்யலாம் என்ற விதி இருக்கிறது.அப்போது, இது 3-வது நடுவருக்கு கொண்டு செல்லப்பட்டு பட்லருக்கு அவுட் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, தொடர்பாக பட்லர்-அஸ்வின் இடையே ஆடுகளத்தில் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் நான் விதிகளின்படியே பட்லரை அவுட் செய்தேன். அதில் தவறு எதுவுமில்லை என்று அஸ்வின் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:

மன்கட்’ முறையில் பட்லரை அவுட் செய்தது தொடர்பாக பெரிதாக விவாதிக்க வேண்டிய அவசியமில்லை. கிரிக்கெட்டில் இது போன்ற நிகழ்வுகள் நடப்பது இயல்பானது, பட்லரை திட்டமிட்டு இந்தமுறையில் அவுட் செய்யவிலலை. இது இயல்பான ஒன்றாகும். நான் செய்த இந்த அவுட் தான் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. இது போன்ற அவுட்கள் முழுமையாக ஒரு போட்டியின் முடிவை தீர்மானிக்கும். நான் கிரிக்கெட் விதிகளை மீறி பட்லரை அவுட் செய்யவில்லை. இதில் எங்கிருந்து கிரிக்கெட்டின் மதிப்பும், ஆரோக்கியமும் பாதிக்கும் என்று எனக்கு தெரியவில்லை. விதிப்படி விளையாடியது தவறு என்றால் விதியை மாற்ற வேண்டும் அல்லது அதை சரி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க