• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தோனி தோனி என்று குரல் எழுப்பி அந்த ரிஷப் பந்த்தை கிண்டல் செய்ய வேண்டாம் – கோலி வேண்டுகோள்

December 5, 2019 தண்டோரா குழு

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக முதல் 20 – 20 போட்டியை இந்திய அணி நாளை எதிர்கொள்கிறது. இந்நிலையில் இன்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, மேற்கிந்தியத் தீவுகளுடான போட்டி குறித்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது ரிஷப் பந்த்தின் சமீபத்திய ஆட்டம் குறித்து செய்தியாளர்கள் கோலியிடம் கேள்வி எழும்பினர்.

அதற்கு பதிலளித்த கோலி,”ரிஷப் பந்த் அவரது திறமையை நிரூபிப்பதற்கு தேவையான இருப்பை வழங்குவது அனைவரது பொறுப்பு என்று நினைக்கிறேன். போட்டியின்போது அவருக்கு வழங்கப்பட்ட வாய்ப்பைத் தவறவிட்டால் நீங்கள் மைதானத்தில் தோனி தோனி என்று குரல் எழுப்பி அந்த இளம் விக்கெட் கீப்பரைக் கிண்டல் செய்ய வேண்டாம். இது மரியாதையாக இல்லை. எந்த வீரருக்கு இந்த நிலைமை வரக்கூடாது. உங்கள் நாட்டுக்காக விளையாடும்போது நிச்சயம் உங்களின் ஆதரவு கிடைக்க வேண்டும்” என்றார்.

இந்திய அணியில் விக்கெட் கீப்பிங்கிற்கு நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த எம்.எஸ்.தோனி, உலகக்கோப்பை போட்டிக்குப் பின் விளையாடாமல் இருந்து வருகிறார். தோனி ஒருவேளை ஓய்வு அறிவித்தால், பேட்டிங்கிலும், கீப்பிங்கிலும் சிறந்து விளங்கும் வீரரைத் தயார் செய்யும் முனைப்பில் இளம் வீரர் ரிஷப் பந்த்துக்கு தேர்வுக் குழு அதிகமான வாய்ப்புகளை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க