• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து பும்ரா விலகல்

September 24, 2019 தண்டோரா குழு

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அக்டோபர் மாதம் 2ஆம் தேதி அன்று விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது. இதற்காக இந்திய கிரிக்கெட் அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. உலகத் தரவரிசையில் நெ.1 பவுலராக இருப்பவர் பும்ரா. பும்ராவின் துல்லியமான பந்துவீச்சை முன்னாள் வீரர்கள் உட்பட அனைவரும் புகழ்ந்து வருகின்றனர். இந்தியா – தென்னாப்பிரிக்க டி20 போட்டியில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதையடுத்து தென்னாப்பிரிக்காவுடனான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பும்ரா பங்கேற்க உள்ளார்.

இந்த நிலையில், இந்திய அணியின் அபார பந்துவீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ராவுக்கு, முதுகில் சிறிய எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக பிசிசிஐ கூறியுள்ளது. வழக்கமான பரிசோதனையின் போது இது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இதன் காரணமாக, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் விளையாட மாட்டார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.அவருக்குப் பதில் உமேஷ் யாதவ் விளையாடுவார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. ஜஸ்பிரித் பும்ரா இல்லாமல் இந்திய அணி களமிறங்குவது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

மேலும் படிக்க