• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

தன்மானத்துக்கு தகராறுன்னா யாருனாலும் இதான் செய்வாங்க!

August 10, 2017 tamilsamayam.com

மதிக்காத இடத்தில் இருந்து வெளியேற வேண்டும் என முன்னாள் பயிற்சியாளர் கும்ளே சரியான முடிவு எடுத்துள்ளதாக முன்னாள் கேப்டன் அசாருதின் தெரிவித்துள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் போது, பயிற்சியாளர் கும்ளே, கேப்டன் கோலி இருவருக்கும் இடையே கடுமையான கருத்து மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து ஒருவழியாக கும்ளே பதவியில் இருந்து விலகினார். இதன்பின் பல்வேறு சர்ச்சைகளை தொடர்ந்து, முன்னாள் இயக்குனர் ரவி சாஸ்திரி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் தன்மானத்துக்கு ஒரு பிரச்சனை வந்தால், கும்ளே இடத்தில் யாராக இருந்தாலும் இதைத்தான் செய்வாங்க என முன்னாள் இந்திய கேப்டன் அசாருதின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அசாருதின் கூறுகையில்,

கும்ளேவின் நிலையை நினைத்தால் கொஞ்சம் கஷ்டமாகத்தான் உள்ளது. அவரை எனக்கு நன்கு தெரியும். அவர் கோவப்படும் நபர் அல்ல. ஆனால், தன்மானத்தை இழப்பதை விட விலகியிருக்கலாம் என அவர் நினைத்திருக்கலாம். என்னைப்பொறுத்தவரை அவர் மிகச்சரியான முடிவைத்தான் எடுத்துள்ளார். என்றார்.

மேலும் படிக்க