• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டெல்லி அணி கேப்டன் பொறுப்பிலிருந்து காம்பீர் விலகல்!

April 25, 2018 தண்டோரா குழு

ஐபிஎல் போட்டிகளில் தொடர் தோல்வி காரணமாக டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கவுதம் காம்பீர் விலகியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த 7-ம் தேதி மும்பையில் தொடங்கியது.இதில் சென்னை, டெல்லி,மும்பை,ஐதராபாத்,கொல்கத்தா,பஞ்சாப்,பெங்களூரு,ராஜஸ்தான் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளனர்.இதில்,மும்பை,டெல்லி அணிகள் இதுவரை விளையாடியுள்ள ஆறு போட்டிகளில் ஐந்து போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி 2 இடங்களில் உள்ளன.இதனால் இரு அணி ரசிகர்களும் விரக்தியில் உள்ளனர்.

இந்நிலையில்,கொல்கத்தா அணியில் கேப்டனாக இருந்து 2 முறை கோப்பையை வென்ற காம்பீரை இம்முறை டெல்லி அணி வாங்கி,அந்த அணிக்கு கேப்டனாக நியமனம் செய்தது.தற்போது அந்த அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால் கவுதம் காம்பீர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதையடுத்து டெல்லி அணியின் புதிய கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான அணி 27-ம் தேதி நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க