• Download mobile app
03 Dec 2025, WednesdayEdition - 3584
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டென்மார்க் ஓபன் சூப்பர் சீரிஸ் பட்டத்தை வென்றார் கிடம்பி ஸ்ரீகாந்த்!

October 23, 2017 tamilsamayam.com

டென்மார்க்கின் ஓடென்ஸில் டென்மார்க் ஓபன் சூப்பர் சீரிஸ் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் இந்தியாவின் கிடம்பி ஸ்ரீகாந்த் மற்றும் தென் கொரியாவின் லீ ஹெய்ன் இல் மோதினர்.

இந்த போட்டியில் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய ஸ்ரீகாந்த் முதல் செட்டை 21-10 எனவும் 2வது செட்டை 21-5 என்ற புள்ளிக்கணக்கிலும் கைப்பற்றினார்.

21-10, 21-5 என நேர்செட் கணக்கில், கிடம்பி ஸ்ரீகாந்த் வெறும் 25 நிமிடங்களில் லீ ஹெய்னை வென்று சாதனைப் படைத்தார். பிரிமியர் பேட்மிண்டன் ஓபன் சீரிஸில் கிடம்பி ஸ்ரீகாந்த் வெல்லும் 3வது பட்டம் இதுவாகும்.

போட்டி முடிந்த பிறகு, இந்திய பேட்மிண்டன் அணியின் பயிற்சியாளரும் இந்தியாவின் முன்னாள் பேட்மிண்டன் வீரருமான, புல்லீலா கோபிசந்த் சமயம் தமிழுக்கு அளித்த பேட்டியில், “இது எளிதான வெற்றியாக தெரியலாம். ஆனால், லீ மிகவும் நுட்பமான வீரர். அவர் கடைசி நேரத்தில் ஆட்டத்தை மாற்றும் திறன் கொண்டவர்.

ஆனால், ஸ்ரீகாந்த் மிகவும் சிறப்பாக விளையாடினார். அவர் போட்டியாளரின் பலவீனத்தை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார். முதல் செட் முடிவில், விட்டுக்கொடுக்காமல் போட்டியை விரைந்து முடிக்க அறிவுறுத்தினேன்” என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க