• Download mobile app
18 Apr 2024, ThursdayEdition - 2990
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சி.எஸ்.கே அணியில் ராபின் உத்தப்பா – ரசிகர்கள் ஆச்சரியம் !

January 22, 2021 தண்டோரா குழு

14 வது ஐபிஎல் தொடருக்கான ஏலம் இன்னும் சொல்ல மாதங்களில் நடைபெறவுள்ளது. இதற்கிடையில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கான வீரர்களை தக்க வைத்தும் விடுவித்தும் வருகிறார்கள். அவ்வாறு விடுவிக்கும் வீரர்களை மற்ற அணியினர் தேர்வு செய்தும் வருகின்றனர்.

இந்நிலையில்,கடந்த வருடம் ராஜஸ்தான் அணியில் விளையாடிய ராபின் உத்தப்பாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்துள்ளது. 2019-ல் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ரூ. 3 கோடிக்கு ராபின் உத்தப்பாவைத் தேர்வு செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. உத்தப்பாவை சிஎஸ்கே அணி அதே விலை கொடுத்து வாங்கியுள்ளது.சிஎஸ்கே அணியின் தொடக்க வீரராக இருந்த ஷேன் வாட்சன் ஓய்வு பெற்றுள்ளார். முரளி விஜய் நீக்கப்பட்டுள்ளார். இதனால் சிஎஸ்கே அணி உத்தப்பாவைத் தேர்வு செய்துள்ளது.

2018, 2019, 2020 ஐபிஎல் போட்டிகளில் மொத்தமாக 40 ஆட்டங்களில் விளையாடி இரு அரை சதம் மட்டுமே உத்தப்பா எடுத்துள்ளார். கடந்த இரு ஐபிஎல் போட்டிகளிலும் அவருடைய ஸ்டிரைக் ரேட் 120-ஐ தாண்டவில்லை. இதனால் ராபின் உத்தப்பாவின் தேர்வு பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

இதற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, புணே வாரியர்ஸ், கேகேஆர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்காக உத்தப்பா விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க