• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் ஓய்வு !

December 17, 2020 தண்டோரா குழு

பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது அமீர், அனைத்து வடிவிலான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளார்.

பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் முகமது அமீர். இவர் பாஸ்தானுக்காக 36 ஒருநாள், 49 டி20 மற்றும் 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
தன் தனித்துவமான வேகப்பந்து வீச்சால் அனைவராலும் பாராட்டப்பட்டார்.

ஆனால், வீச்சாளர் முகமது அமிர். இவரை இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின்போது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக போலீசார் கைது செய்தனர். விசாரணை முடிவில் ஐந்து ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடைவிதிக்கப்பட்டது.அதன்பின் மீண்டும் பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்தார். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் விளையாட விரும்பினார். இதனால் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.

டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றதால், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அதிருப்தி அடைந்தது. இதனால் ஒயிட்-பால் கிரிக்கெட்டில் அவரை சேர்க்காமல் ஓரங்கட்டினர். இந்த நிலையில் அனைத்து வடிவிலான சர்வதேச கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக முகமது அமிர் அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க