• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற மலிங்கா முடிவு

February 8, 2018 தண்டோரா குழு

இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லஸித் மலிங்கா, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.

இலங்கை அணியின் முன்னணி வேகபந்து வீச்சாளார் லஸித் மலிங்கா தற்போது பெரிதும் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதில்லை. நடந்து முடிந்த ஐ.பி.எல். ஏலத்தில் லஸித் மலிங்காவை மும்பை அணி ஏலம் எடுக்காத நிலையில் அணியின் ஆலோசகராக அறிவித்துள்ளது.

இந்நிலையில், அண்மையில் செய்தி நிறுனத்திற்கு பேட்டியளித்த அவர்,

“மன ரீதியாக கிரிக்கெட் விளையாடுவதை நிறைவு செய்துவிட்டேன். இனிமேலும் சர்வதேச போட்டிகளில் விளையாடுவேன் என நான் கருதவில்லை. விரைவில் எனது ஓய்வு முடிவை நான் அறிவிக்க திட்டமிட்டுள்ளேன்.இலங்கை கிரிக்கெட் வாரியத்துடன் நான் இன்னும் பேசவில்லை. நான் இலங்கை திரும்பியதும், எனது உடல் எவ்வாறு ஒத்துழைப்பு தருகிறது என்பதை தெரிந்து கொள்ள உள்ளூர் போட்டிகளில் மீண்டும் கலந்து கொள்வேன். ஆனால், தற்போது நான் இனி ஐபிஎல் போட்டியில் விளையாடுவதும் முடிவுக்கு வந்துவிட்டது. மும்பை இந்தியன்ஸ் அணியுடன் புதிய அத்தியாத்தை நான் துவங்க உள்ளேன். நான் இனிமேல் கிரிக்கெட் விளையாடாமல் கூட போகலாம்” என்றார்.

மேலும் படிக்க