• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை கிங்ஸை வீழ்த்தி, திரில் வெற்றி பெற்றது டுட்டி பேட்ரியாட்ஸ்!!

July 21, 2018 tamilsamayam.com

தமிழ்நாடு பிரிமியர் லீக்கில் இன்று நடைபெற்ற போட்டியில் டுட்டி பேட்ரியாட்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் லைகா கோவை கிங்ஸ் அணியை வீழ்த்தியுள்ளது.

டி.என்.பி.எல். எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரின் மூன்றாவது சீசன் கடந்த 11ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12 வரை நடைபெறுகிறது.இந்த ஆண்டு முதல் முறையாக வெளிமாநில வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

இந்நிலையில்,திண்டுக்கல் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்ற 9வது போட்டியில், டுட்டி பேட்ரியாட்ஸ் அணியும் லைகா கோவை கிங்ஸ் அணியும் மோதின.

இதில் முதலில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி, முதலில் பந்துவீச முடிவு செய்தது.இதைத் தொடர்ந்து களமிறங்கிய டுட்டி பேட்ரியாட்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கௌசிக் காந்தி மற்றும் தினேஷ் ஆகியோர் நிலைத்து நின்று ஆடி ரன்களை குவிக்கத் தொடங்கினர். சிறப்பாக விளையாடிய கௌசிக் 43 ரன்களிலும் தினேஷ் 59 ரன்களிலும் அவுட்டாகி வெளியேறினர்.

அதன்பின் களமிறங்கிய மற்ற வீரர்கள் சீரான இடைவெளியில் தங்கள் விக்கெட்களை இழந்ததால்,20 ஓவர்கள் முடிவில் டுட்டி பேட்ரியாட்ஸ் அணி 7 விக்கெட்களை இழந்து 182 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய கோவை கிங்ஸ் அணியினர்,ஒருபுறம் அதிரடியாக ஆடினாலும் மற்றொரு புறம் விக்கெட்களை சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது.இதனால்,கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 171 ரன்களை குவித்தது.இதனால்,டுட்டி பேட்ரியாட்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் டுட்டி பேட்ரியாட்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.அதேபோல்,கோவை அணி புள்ளிகள் பட்டியலில் 6 வது இடத்தில் உள்ளது.

மேலும் படிக்க