• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோபப்பட்ட ரோஹித் சர்மா -அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்

April 29, 2019 தண்டோரா குழு

மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா விதிகளை மீறி செயல்பட்டதாக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

12வது ஐபிஎல் தொடரின் லீக் சுற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு அணியும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் விளையாடி வருகிறது. நேற்று ஈடன் காடன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா – மும்பை அணிகள் மோதின. முதலில் ஆடிய கொல்கத்தா அணி 232 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் கில், லின், ரஸ்ஸல் என அனைத்து வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக ஆடிய ரஸ்ஸல் 40 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார்.

பின்னர், 233 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய மும்பை அணி 198 ரன்கள் மட்டுமே சேர்த்து 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. மும்பை அணியில் சிறப்பாக விளையாடிய ஹர்டிக் பாண்டியா 34 பந்துகளில் 91 ரன்கள் எடுத்தார். இப்போட்டியின் போது, மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில் எல்.பி.டபிள்யூ ஆனார். நடுவர் அவுட் கொடுத்தார். இதனால் ரோஹித் கோபமடைந்து நான் ஸ்ட்ரைக்கர்’ முனையில் இருந்த ஸ்டம்ப்களை பேட்டால் தட்டிவிட்டு சென்றார். அவரின் இந்த செயல் சர்ச்சையானது.

இந்நிலையில் அவர் மைதானத்தில் விதிமுறைகளை மீறி நடந்து கொண்டதாக அவரின் சம்பளத்திலிருந்து 15 சதவீதத்தை அபராதமாக கட்ட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க