• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கிட்டதட்ட மரணத்தை அனுபவித்தேன் – செரீனா வில்லியம்ஸ்

February 22, 2018 tamilsamayam.com

பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் பிரசவத்திற்கு பின்னா் கிட்டத்தட்ட மரணத்தை அனுபவித்து மீண்டும் உயிர் தப்பிதாக கூறியுள்ளார்.

பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்கூக்கு கடந்த செப்டம்பா் மாதம் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. தற்போது அந்த குழந்தைக்கு அலெக்சிஸ் ஒலிம்பியா ஒஹானியன் ஜூனியா் என்று பெயாிடப்பட்டுள்ளது. இந்நிலையில் செரீனா வில்லியம்ஸ் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கட்டுரையில், எனக்கு கடந்த செப்டம்பா் மாதம் பெண் குழந்தை பிறந்தது. மகள் பிறந்த நிலையில் எனக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் குழந்தை பிறந்த 24 மணி நேரத்தில் எனது உடல்நிலையில் மிகவும் பின்னடைவு ஏற்பட்டது. இதன் பின்னா் நான் பிழைக்க மாட்டேன் என்று எண்ணிய தருனம் அது.

அந்த நேரத்தில் மருத்துவா்களும், செவிலியா்களும் மேற்கொண்ட சிறப்பான சிகிச்சையால் தான் மீண்டும் உயிர்ப்பிழைத்தேன். நுரையீரல் தொற்று நோய் தொடா்பாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு ரத்தம் உறைந்த நிலையில் சிறந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்று மிகவும் உணா்வுப்பூா்வமாக கட்டுரை எழுதியுள்ளார்.

வெள்ளையா்களின் விளையாட்டாகவும், பணக்காரா்களின் விளையாட்டாகவும் கருதப்பட்ட டென்னிசில் கடந்த 1995ம் ஆண்டு கால் பதித்து முதல் கிரான்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.மேலும் அவா் டென்னிஸ் உலகில் கிட்டதட்ட 6 ஆண்டுகள் தரவரிசைப் பட்டியலில் தொடா்ந்து முதல் இடத்தில் ஆதிக்கம் செலுத்தியவா்.

 

மேலும் படிக்க