• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காயம் காரணமாக சென்னை அணி வீரர் கேதர் ஜாதவ் அணியில் இருந்து விலகல்

April 9, 2018 தண்டோரா குழு

தொடை எலும்பில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல்., தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர், கேதர் ஜாதவ் விலகியுள்ளார்.

10 வது ஐபிஎல் கிரிகெட் மும்பையில் கடந்த  7ம் தேதி துவங்கியது. இதில் இரண்டு ஆண்டுகளுக்கு பின் களமிறங்கிய சென்னை அணி மும்பை அணியை வீழ்த்தியது. மும்பை அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியின் போது சென்னை அணி வீரர் ஜாதவிற்கு காயம் ஏற்பட்டது.

இந்நிலையில் மும்பை அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியின் போது ஏற்பட்ட காயத்துக்கு ஜாதவ் ஸ்கேன் எடுத்துபார்க்கப்பட்டது. அதில் இரண்டாம் கட்ட காயத்தால் ஜாதவ் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த காயம் குணமாக நீண்ட நாட்கள் ஆகும் என்பதால், இந்த ஆண்டுக்கான ஐபிஎல்., தொடரில் இருந்து விலகியுள்ளார்.

இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் மைக்கேல் ஹசி கூறுகையில்,’சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனை இழந்தது மிகப்பெரிய இழப்புதான்.’  எனக் கூறியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கேதார் ஜாதவ் ரூ 7.8 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க