• Download mobile app
11 Jun 2026, ThursdayEdition - 3774
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காயத்திலிருந்து மீண்டு உலகக்கோப்பைக்கு ரெடியான கேதார் ஜாதவ்

May 18, 2019 தண்டோரா குழு

இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் கேதார் ஜாதவ் காயத்திலிருந்து மீண்டதை தொடர்ந்து உலகக் கோப்பையில் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

12 வது உலககோப்பை கிரிக்கெட் போட்டி 2019 இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் மே 30-ந் தேதி முதல் ஜூலை 14-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.

உலகக் கோப்பைக்கான இந்திய அணி கடந்த ஏப்ரல் 16ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில், ஆல்ரவுண்டர் கேதார் ஜாதவின் பெயரும் இடம்பெற்றது. இதற்கிடையில், ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடிய கேதார் ஜாதவிற்கு போட்டியின் போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் உலகக்கோப்பையில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில் அவரின் தோள்பட்டை காயம் குணமடைந்துவிட்டதாக மருத்துவ குழு தெரிவித்துள்ளது. இதனால் அவர் உலககோப்பையில் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க