• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காதலரை கரம்பிடித்தார் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் !

December 14, 2018 தண்டோரா குழு

பேட்மிண்டன் வீரர்கள் கஷ்யப் ,சாய்னா நேவால் இன்று திருமணம் செய்து கொண்டனர்.

இந்தியாவின் பிரபல பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால், ஒலிம்பிக், காமென் வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்று, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். ஐதராபாத்தை சேர்ந்த 28 வயதான சாய்னா நேவால், சக பேட்மிண்டன் வீரரும் ஐதராபாத்தை சேர்ந்தவருமான 32 வயது பாருபள்ளி காஷ்யப்பை காதலித்து வந்தார். கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே மலர்ந்த நட்பு காலப்போக்கில் காதலாக மாறியது.

இதையடுத்து, டிசம்பர் மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. அதைபோல் டிசம்பர் 20-ம் தேதியிலிருந்து ப்ரீமியர் பேட்மின்டன் லீக் தொடங்க இருப்பதால், சாய்னா – காஷ்யப் பிஸியாகிவிடுவர். எனவே, டிசம்பர் 16-ம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில், பேட்மிண்டன் வீரர்கள் கஷ்யப் ,சாய்னா நேவால் இன்று திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு சமூக வலைதளங்களில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க