• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கடைசி போட்டியில் மாஸ் காட்டி வெற்றியோடு விடைபெற்றார் இலங்கை வீரர் மலிங்கா

July 27, 2019 தண்டோரா குழு

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா, ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து நேற்று வெற்றியோடு விடைபெற்றார்.

இலங்கை – வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 314 ரன்கள் குவித்தது. குசல் பெரேரா சதம் (111 ரன், 99 பந்து, 17 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசினார். இதையடுத்து, 315 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய வங்காளதேச அணி 41.4 ஓவர்களில் 223 ரன்களுக்கு சுருண்டது. இதன்மூலம் இலங்கை அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசிய மலிங்கா, 38 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியோடு அவர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வுபெற்றார். ஆனாலும் அவர் 20 ஓவர் போட்டியில் தொடர்ந்து ஆடுவார். இந்த போட்டிக்கு பிறகு மலிங்காவை தோளில் தூக்கி அந்த அணி வீரர்கள் சுற்றி வந்தனர், மற்றும் அனைத்து வீரர்களும் வரிசையில் நின்று தங்களது பேட்டை தூக்கி அவருக்கு மரியாதையை செலுத்தினர். லசித் மலிங்கா 226 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 338 விக்கெட்டுகள் கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்க