• Download mobile app
18 Apr 2024, ThursdayEdition - 2990
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஒரு போட்டியை எதிர்கொள்ளும் போது தோனி தன் மனதில் ஒரு ப்ளூப்ரின்ட்டை வைத்திருப்பார் – மெக்கல்லம்

May 20, 2019 தண்டோரா குழு

12 வது உலககோப்பை கிரிக்கெட் போட்டி 2019 இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் மே 30-ந் தேதி முதல் ஜூலை 14-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை,
ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.

இந்திய அணி ஜூன் மாதம் 6-ம் தேதி தனது முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியுடன் மோதுகிறது. உலகக்கோப்பை தொடருக்காக அனைத்து அணி வீரர்களும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணி வீரர் தோனி குறித்து பிரண்டன் மெக்கல்லம் கருத்து தெரிவித்துள்ளார்.

தோனி பற்றி மெக்கல்லம் கூறும்போது,

தோனி‘இந்திய அணிக்கு விலைமதிப்பற்றவர். சமீபகாலமாக அவரது பேட்டிங் சிறப்பாக உள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அது உலகக்கோப்பை தொடருக்கு உதவியாக இருக்கும். அவர் களத்திற்கு வரும் போது எதிரணியினருக்கு பதட்டத்தை ஏற்படுத்திவிடுவார். ஒரு போட்டியை எதிர்கொள்ளும் போது அவர் மனதில் ஒரு ப்ளூப்ரின்ட்டை வைத்திருப்பார் என்று கூறியுள்ளார்.

மெக்கல்லம் ஐபிஎலில் தோனி தலைமையில் சென்னை சூப்பர்கிங்க்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க