• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஐ.பி.எல் தொடக்க விழாவை ரத்து செய்வதாக பிசிசிஐ அறிவிப்பு!

February 22, 2019 தண்டோரா குழு

ஐ.பி.எல் தொடக்க விழாவிற்கு செலவிடப்படும் பணத்தை வீரமரணடைந்த சி.ஆர்.பி.எப் வீரர்களின் குடும்பங்களுக்கு கொடுக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல் போட்டியின் 12-வது சீசன் இந்தியாவில் வரும் மார்ச் மாதம் 23-ம் தேதி தொடங்கும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு த ஐ.பி.எல் தொடருக்கான அட்டவணையை இந்தியன் ப்ரீமியர் லீக் நிர்வாகம் வெளியிட்டது. அதன்படி, மார்ச் 23-ம் தேதி முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை நடைபெறும் முதலிரண்டு வாரங்களுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டியின் துவக்கவிழா பிரம்மாண்டமாக நடைபெறுவது வழக்கம். இந்திய முழுவதிலும் இருந்து திரைப்பிரலங்கள், பின்னணி பாடகர்கள் கலந்து கொண்டு துவக்க விழா வண்ண மையமாக நடைபெறும். இந்த வருடமும் அதைபோல் பிரம்மாண்டமாக நடைபெறும் என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்நிலையில், பிசிசிஐயின் ஆலோசனைக் கூட்டம் இன்று (பிப்.222) டெல்லியில் நடைபெற்றது. இதில், பிசிசிஐ நிர்வாகக்குழு உறுப்பினர்கள் 3 பேர் நேரடியாகவும், மற்ற உறுப்பினர்கள் தொலைபேசி வாயிலாகவும் பங்கேற்றனர். இந்த ஆலோசனை முடிந்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த நிர்வாகக்குழுத் தலைவர் வினோத் ராய்,

அடுத்த மாதம் (மார்ச் 23) தொடங்க உள்ள ஐ.பி.எல் டி-20 லீக் கிரிகெட் தொடருக்கான தொடக்க விழா ரத்து செய்யப்படுகிறது. அதற்காக செலவு செய்யப்படும் பணம், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்காக வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் படிக்க