• Download mobile app
13 Oct 2025, MondayEdition - 3533
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐபிஎல் சீசன்: பஞ்சாபை பந்தாடிய மும்பை; தொடரில் 3வது வெற்றி!

May 5, 2018 tamilsamayam.com

பஞ்சாபிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை அபார வெற்றி பெற்றது.11வது ஐபிஎல் தொடரின் 34வது ஆட்டத்தில் பஞ்சாப்,மும்பை அணிகள் நேற்று மோதின.டாஸ் வென்ற மும்பை அணி, பீல்டிங்கை தேர்வு செய்தது.

இதனால் பேட்டிங்கில் களமிறங்கிய பஞ்சாப் அணி தொடக்க வீரர்கள் ராகுல்,கெய்ல் அதிரடி காட்டினர்.அதிகபட்சமாக கெய்ல் 50(40) ரன்களும்,ஸ்டோனிஸ் 29(15)* ரன்களும் எடுத்தனர்.

20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது.மும்பை அணி சார்பில் மிட்செல், பும்ரா,பாண்டியா,மார்கண்டே,கட்டிங் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய மும்பை அணி தொடக்க வீரர் சூர்யாகுமார் யாதவ்,லெவிஸ் சிறப்பான தொடக்கம் கொடுத்தார்.அதிகபட்சமாக சூர்யகுமார் 57,பாண்டியா 31,கிஷான் 25 ரன்கள் எடுத்தனர்.

பஞ்சாப் அணி சார்பில் முஜீப் 2 விக்கெட் வீழ்த்தினார்.19 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து, மும்பை அணி 176 ரன்கள் எடுத்து வென்றது. இதன் மூலம் 3 போட்டிகளில் வெற்றி பெற்று,புள்ளி பட்டியலில் 5வது இடத்திற்கு மும்பை முன்னேறியுள்ளது.

மேலும் படிக்க