• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஐபிஎல்., குறித்து உண்மையை சொன்ன அஷ்வின்!

February 17, 2018 tamilsamayam.com

ஐபிஎல்., கிரிக்கெட் தொடர் ஒன்றும் இந்திய கிரிக்கெட்டுக்கு வில்லன் இல்லை என அஷ்வின் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008 முதல் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடரான இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல்.,) நடக்கிறது. இது வெற்றிகரமாக 11வது ஆண்டில் அடி எடுத்து வைக்கவுள்ளது.

இந்த ஆண்டில் சுமார் 2 ஆண்டு தடைக்கு பின் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பங்கேற்கவுள்ளது. இத்தொடரை இந்திய கிரிக்கெடுக்கு எதிரான மக்கள் கருதுவதாக அஷ்வின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அஷ்வின் கூறுகையில்,

“ஐபிஎல்., கிரிக்கெட் தொடரை மக்கள் இந்திய கிரிக்கெட்டின் வில்லனாக கருதுகின்றனர். இது முற்றிலும் தவறானது. ஐபிஎல். தொடரில் பங்கேற்கும் எல்லா வீரருக்கும் பல லட்சங்களில் பணம் கிடைக்கிறது. எனக்கு தெரிந்து ஒரு மனிதனுக்கு பணம் கொடுக்கும் அளவுக்கு தன்னம்பிக்கை வேறு யாராலும் தரமுடியாது. பிசிசிஐ.,யின் மிகப்பெரிய முயற்சி தான் ஐபிஎல்., கிரிக்கெட் தொடர்”. என்றார்.

மேலும் படிக்க