ஐதராபாத்துக்கு எதிரான போட்டியில் ராயுடுவின் அபாரமான சதத்தால் சென்னை அணி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.
முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணிக்கு சென்னை அணியின் பவுலிங்கால் மிரட்டினர். தொடக்கத்தில் தடுமாறினாலும்,இறுதியில் சிறப்பாக விளையாடிய ஐதராபாத் அணியின் தவான் 79, வில்லியம்சன் 51,ஹூடா 21 அடிக்க 179 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து பேட்டிங் செய்த சென்னை அணிக்கு வாட்சன், ராயுடு மிக அருமையான தொடக்கம் கொடுத்தனர்.வாட்சன் 35 பந்தில் 57 ரன் எடுத்து விக்கெட்டை பறி கொடுத்தார். பின் வந்த ரெய்னா 2 ரன்னில் அவுட்டானார்.
கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ராயுடு 62 பந்தில் 7 சிக்ஸர், 7 பவுண்டரி விளாசி 100* ரன்கள் அடித்தார்.ராயுடு 100, தோனி 20 ரன் அடிக்க சென்னை 19 ஓவரில் 2 விக்கெட் மட்டும் இழந்து 180 ரன்கள் எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
(WNCT) சார்பாக “பாம்புகளை அறிவோம் பாம்பு கடி மரணமில்லாத கோவையை உருவாக்குவோம் கல்வி புத்தகம் வெளியீடு
ஈஷாவில் சத்குரு வழிநடத்தும் ‘குருவின் மடியில்’ தியான நிகழ்ச்சி -தமிழகமெங்கும் 112 இடங்களில் நேரலை
கோவையில் சி.ஐ.ஐ மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு-தாய்வான் தொழில்நுட்ப ஆடைகள் கூட்டு மாநாடு 2025 துவக்கம்
கோவையில் “வணக்கம் கோவை” என்ற தலைப்பில் நடைபெற்ற பிக்கி புளோ மகளிர் அமைப்பின் தேசிய நிர்வாகக் குழு கூட்டம்
கோவை வாசவி திருக்கோயிலில் மண்டல பூஜை ஒட்டி நடைபெற்ற மகிழ்வித்து மகிழ் நிகழ்ச்சி
பசுமை தொண்டாமுத்தூர் சார்பில் 2025-இல் 2 லட்சம் மரங்கள் நடத்திட்டம்