• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

என்னை மனிதனாக மாற்றியதே மகள் ஜிவா தான் – தோனி

June 13, 2018 tamilsamayam.com

கிரிக்கெட் தான் வாழ்க்கையாக நினைத்து வாழ்ந்துகொண்டிருந்த எனக்கு மகள் ஜிவா தான் மனிதனாக மாற்றியுள்ளார் என தல தோனி தெரிவித்துள்ளார்.

தோனி இந்திய கிரிக்கெட் அணிக்கு கிடைத்த பொக்கிஷமாக பார்க்கப்படுகிறது.இப்படி ஒரு வீரர் தங்கள் அணிக்கு கிடைக்கவில்லையே என பல நாட்டு கிரிக்கெட் வீரர்கள் பொறாமைபடும் அளவுக்கு திறமைமிக்கவராக உள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணி கோப்பையை வென்றது. பரிசளிப்பு விழாவின் போது மற்ற வீரர்கள் வெற்றி கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் தல தோனியோ தன் மகள் ஜிவாவுடன் தனியாக விளையாடிக் கொண்டிருந்தார்.

தோனி கூறியதாவது;

“என்னை மனிதானாக என் மகள் ஜிவா மாற்றியுள்ளார்.ஜிவா பிறப்பதற்கு முன்னர் நான் பெரும்பாலான நாட்கள் கிரிக்கெட் விளையாடுவதிலேயே கழித்து வந்தேன்.வெளிநாடு சுற்றுப்பயணம் செல்லும் நிலை ஏற்படுவதால் குடும்பத்துடன் நேரத்தை செலவிடமுடியாமல் இருந்தேன்.ஒரு மகள் எப்போதும் தன் தந்தையுடன் மிக அன்பாக இருப்பது இயல்புதான்.அதே போன்று என் மகளும் உள்ளார்.

ஐபிஎல் போட்டி தொடர் முழுவதும் ஜிவா என்னுடன் இருந்தார்.போட்டிக்கு முன்னும்,பின்னும் மைதானத்தில் புல் தரையில் என்னுடன் விளையாட, மைதான பாதுகாவலர்களிடம் அனுமதி கோரினேன். மேலும் எங்கள் அணியில் நிறைய வீரர்கள் குழந்தைகளுடன் வந்திருந்தனர்.அவர்கள் ஒன்றாக விளையாடுவதைப் பார்க்க மிக மகிழ்ச்சியாக இருந்தது”.என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க