• Download mobile app
19 Jan 2026, MondayEdition - 3631
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரையிறுதியில் அதிர்ச்சி: பிவி சிந்து போராடித் தோல்வி

March 19, 2018 tamilsamayam.com

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் அரையிறுதி வரை முன்னேறிய இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஜப்பானிய வீராங்கனை அகனே யமகுச்சியிடம் தோல்வியடைந்தார்.

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் பழமையான பேட்மிண்டன் தொடர்களில் ஒன்றான ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீராங்கனை பிவி சிந்து ஒன்றையர் பிரிவு அரையிறுதிக்குத் தகுதி பெற்றார்.

சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் ஜப்பானிய வீராங்கனை அகனே யமகுச்சியை எதிர்த்துக் களமிறங்கினார். முதல் செட்டை 21-19 என சிந்து கைப்பற்றினார். அடுத்த செட்டில் எழுச்சி பெற்ற யமகுச்சி 21-19 என இரண்டாவது செட்டை தனதாக்கினார்.

மூன்றாவது செட்டில் இருவரும் சரிமாரியாக போட்டியிட்ட நிலையில் யமகுச்சி 21-18 என சிந்துவை வீழ்த்தினார். இதன் மூலம் 19-21, 21-18, 21-18 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். தோல்வியைத் தழுவிய சிந்து தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

மேலும் படிக்க