• Download mobile app
03 Dec 2025, WednesdayEdition - 3584
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலக சாதனையில் இணைந்த முதல் இந்தியர் தினேஷ் கார்த்திக்

March 20, 2018 tamilsamayam.com

நேற்று நடந்த முத்தரப்பு கிரிக்கெட் இறுதிப் போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் அபார பேட்டிங்கால் இந்திய அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது..

இலங்கை சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக சுதந்திர கோப்பை முத்தரப்பு கிரிக்கெட் தொடர் இலங்கை நடத்தியது. இதில் இலங்கை, இந்தியா, வங்கதேசம் அணிகள் விளையாடின. இத்தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா – வங்கதேச அணிகள் மோதின.

இந்த போட்டியில் கடைசி நேரத்தில் இந்தியாவின் கனவை தினேஷ் கார்த்திக்கின் அதிரடியான ஆட்டத்தால் நினைவாக்கினார். கடைசி ஒரு பந்துக்கு 5 ரன்கள் தேவை என்ற நிலையில் கார்த்திக் சிக்ஸர் அடித்து அசத்தினார்.

தினேஷ் கார்த்திக் மொத்தம் எதிர் கொண்ட 8 பந்தில் 3 சிக்ஸர்கள், இரண்டு பவுண்டரிகள் விளாசி 28 ரன்கள் குவித்தார். டி20 போட்டியில் கடைசி பந்தில் சிக்ஸர் விளாசி அணியின் வெற்றிக்கு உதவிய முதல் வீரர் என்ற பெருமையை கார்த்திக் பெற்றுள்ளார்.

மேலும் படிக்க