• Download mobile app
23 Apr 2024, TuesdayEdition - 2995
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உலகக்கோப்பை தொடரிலிருந்து தவான் விலகல்…!

June 11, 2019 தண்டோரா குழு

காயம் காரணமாக உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து ஷிகார் தவான் விலகியுள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் கடந்த மே 30ம் தேதி துவங்கியது. இந்திய அணி தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியையும், இரண்டாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியையும் வீழ்த்தியது. ஆஸ்திரேலிய அணியுடன் சதமடித்து அசத்திய தவான் இந்திய அணியின் வெற்றிக்கு பெரும் உதவியாக இருந்தார். இப்போட்டியில் தவான் 117 ரன்கள் எடுத்து இருந்தார்.இந்த போட்டியில் பேட்டிங் செய்த போது தவானுக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதனால் இவர் ஃபீல்டிங் செய்வதிலிருந்து விலகி டிரெஸ்ஸிங் அறையில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார்.

இதற்கிடையில், இவரை பரிசோதித்த இந்திய அணி ஃபிஸியோக்கள் தவான் கட்டாயமாக 3 வாரங்களுக்கு விளையாடக்கூடாது என அறிவுறுத்தினர். இந்நிலையில், 3 வார கட்டாய ஓய்வு காரணமாக தவான் இந்திய உலகக்கோப்பை அணியிலிருந்து விலகியுள்ளார். தவானுக்கு பதிலாக ரிஷப் பண்ட் அல்லது ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் இடம்பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தவான் காயம் காரணமாக அணியில் இருந்து விலகியது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க