• Download mobile app
13 Mar 2026, FridayEdition - 3684
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஈராக் மீதான 30 ஆண்டுகால தடையை நீக்கியது ஃபீபா

March 21, 2018 tamilsamayam.com

சர்வதேச கால்பந்து போட்டிகளை நடத்த ஈராக் மீது இருந்த 30 ஆண்டுகால தடையை, பீபா தற்போது நீக்கியுள்ளது.

ஈராக் நாட்டில் கடந்த 1990 ஆம் ஆண்டு குவைத் படையெடுப்பு நடந்தது. அன்று முதல், ஈராக் நாட்டில் சர்வதேச கால்பந்து போட்டிகளை நடத்த சர்வதேச கால்பந்து சங்கமான ஃபீபா தடை விதித்தது. இதைத் தொடர்ந்து தீவிரவாத தாக்குதல், ஐஎஸ் படையெடுப்பு என பல்வேறு ஆயுத யுத்தங்கள் நடந்ததால் ஈராக்கில் கடந்த ஈராக்கில் கடந்த 30 ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளே நடக்காமல் இருந்தது.

இந்நிலையில், அந்நாட்டில் அமைதி திரும்பி வருவதால், ஈராக் மீதான தடையை ஃபீபா நீக்கியுள்ளது. இது குறித்து பேட்டியளித்த ஃபீபா தலைவர் ஜியானி இந்பாண்டினோ, “ஈராக்கில் உள்ள அர்பில், பாஸ்ரா மற்றும் கர்பாலா ஆகிய இடங்களின் சர்வதேச போட்டிகளை நடத்த அனுமதிக்கிறோம். இருப்பினும், தலைநகர் பாக்தாத்தில் சர்வதேச போட்டிகளை நடத்துவது பற்றி ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது,” என்று தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பையடுத்து, வரும் மார்ச் 21 ஆம் தேதி பார்காவில் கத்தார், சிரியா நாடுகள் பங்கேற்கும் நட்பு ரீதியான போட்டித் தொடர் நடத்தப்பட உள்ளது. இந்த செய்தியால், அந்நாட்டு அரசும், மக்களும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

மேலும் படிக்க