• Download mobile app
19 Jan 2026, MondayEdition - 3631
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இலங்கை கேப்டனுக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை

June 21, 2018 tamilsamayam.com

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் இலங்கை கேப்டன் தினேஷ் சண்டிமலுக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.முதல் போட்டியில் விண்டீஸ் வெற்றி பெற்றது.இரண்டாவது போட்டி டிரா ஆனது.இந்த தொடரின் 2வது போட்டியின் போது பந்தை விண்டீஸ் அணிக்கு இலங்கை பவுலிங் செய்து கொண்டிருந்த போது,3வது நாள் ஆட்டத்தின் போது பந்து சேதமாகியுள்ளது.புது பந்து கொடுத்தால் தான் விளையாடுவோம் என இலங்கை அணி தெரிவித்தது.இதனால் 2 மணிநேரம் போட்டி பாதிக்கப்பட்டு பின் தொடர்ந்தது.

இந்நிலையில் போட்டி நடுவர்கள் ஆய்வு செய்ததில் சண்டிமல் பந்தை சேதப்படுத்த ஏதோ ஒரு செயற்கை திரவத்தை தடவியதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதையடுத்து ஐசிசி விதியை மீறிய குற்றத்திற்காக இலங்கை கேப்டன் தினேஷ் சாண்டிமலுக்கு 100% போட்டி சம்ளத்தை அபராதமாகவும், ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் பார்படாசில்,கென்சிங்டன் ஓவலில் நடைப்பெறும் 3வது டெஸ்ட் போட்டியில் சண்டிமல் விளையாடமாட்டார்.

மேலும் படிக்க