• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்திய கிரிக்கெட் அணி அனுமதி வாங்கியே ராணுவ தொப்பியை அணிந்தது – ஐசிசி விளக்கம்

March 11, 2019 தண்டோரா குழு

இந்திய கிரிக்கெட் அணி அனுமதி வாங்கியே ராணுவ தொப்பியை அணிந்தது என்று பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு ஐசிசி விளக்கம் அளித்துள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 3-வது ஒரு நாள் போட்டி ராஞ்சியில் நேற்று நடந்தது. இப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இந்தப் போட்டி தொடங்கும் முன்பாக, புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த இந்தியப் படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் இந்திய வீரர்கள், பயிற்சியாளர்கள் என அனைவருக்கும் இந்திய ராணுவத்தின் கவுரவ லெப்டினன்ட் அந்தஸ்தில் உள்ள விக்கெட் கீப்பர் தோனி, ராணுவ வீரர்கள் அணியும் தொப்பிகளை வழங்கினார்.

இந்த தொப்பியை அணிந்து இந்திய வீரர்கள் போட்டியில் விளையாடினர். புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களின் குழந்தைகளின் படிப்புக்கு உதவ தேசிய பாதுகாப்பு நிதி திரட்ட உதவும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்திய வீரர்கள் ராணுவ தொப்பி அணிந்து விளையாடினர். இதற்கிடையில், ராஞ்சி போட்டியில் இந்திய வீரர்கள் ராணுவ வீரர்களுக்குரிய தொப்பியை அணிந்ததற்கு பாகிஸ்தான் அரசாங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில் ‘‘ராணுவ தொப்பியை பயன்படுத்துவது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் முன்கூட்டியே ஐ.சி.சி.யிடம் ஆலோசனை நடத்தியது. இது விதிமீறல் அல்ல என்று உறுதி செய்யப்பட்ட பிறகே அந்த விசே‌ஷ தொப்பியை இந்திய வீரர்கள் அணிந்தனர். இது நலநிதி திரட்டும் முயற்சியின் ஒரு பகுதியாகும்’’ என்று ஐ.சி.சி. செய்தி தொடர்பாளர் விளக்கம் அளித்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க