• Download mobile app
03 Dec 2025, WednesdayEdition - 3584
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி

July 13, 2018 தண்டோரா குழு

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றிப் பெற்றது.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நேற்று நடைபெற்றது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பீல்டிங்கை தேர்வு செய்தார்.இதனையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 268 ரன்கள் எடுத்தது.இதன்மூலம் இந்திய அணிக்கு 269 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.

இதனையடுத்து களம் இறங்கிய இந்திய அணி 40.1 ஓவரில் 8 விக்கெட் வித்தியாசத்தில் 269 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் 137 ரன்கள்,கோலி 75 ரன்கள்,தவான் 40 ரன்கள் எடுத்தனர்.இதையடுத்து,3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.

மேலும் படிக்க