July 9, 2018
தண்டோரா குழு
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது 20-20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இங்கிலாந்து,இந்தியா அணிக்கு இடையிலான 3-வது டி20 போட்டி நேற்று(ஜூலை 8)நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது.முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில், 8 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்களுக்கு எடுத்தது.அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் 67 ரன்கள் எடுத்தார்.
பின்னர் 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வெளியேறினார்.அடுத்து வந்த கே.எல்.ராகுல் 19 ரன்களிலும்,விராட் கோலி 43 ரன்களிலும் வெளியேறினர்.
மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ரோஹித் ஷர்மா 56 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து சதம் விளாசினார்.இறுதியில் இந்திய அணி 18.4 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.இதன் மூலம் டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது.