• Download mobile app
19 Jan 2026, MondayEdition - 3631
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அர்ஜெண்டினாவில் தொடங்கியது 2018 இளையோர் ஒலிம்பிக் போட்டிகள்

October 6, 2018 தண்டோரா குழு

அர்ஜெண்டினா ப்யூனோஸ் எயர்ஸ் நகரில் 2018 கோடைக்கால இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் இன்று துவங்கியது.

2016ல் கோடைகால இளையோர் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றது. அதன்பின் இன்று 18 வயதுக்குட்பட்டோருக்கான ஒலிம்பிக் போட்டிகள் அர்ஜெண்டினாவில் ப்யூனோஸ் எயர்ஸ் நகரில் தொடங்கியது.மொத்தம் 34விளையாட்டுகள் இப்போட்டியில் இடம்பெறள்ளது.

இந்த போட்டிகள் இன்று தொடங்கி அக்டோபர் 18ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 3998 வீரர்கள் கலந்துகொள்கின்றனர். இந்தியா சார்பில் மொத்தம் 47 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.கடந்த 2014ல் நடைபெற்ற இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் இந்தியா ஒரு வெள்ளி,ஒரு வெண்கல பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் இன்று நடக்கும் இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளை சிறப்பிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் டூடுல்ஸை வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க