• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அரையிறுதிக்கு முன்னேறியது பிரான்ஸ்,பெல்ஜியம் அணிகள்

July 7, 2018 தண்டோரா குழு

உலகக்கோப்பை கால்பந்து தொடரில் அரையிறுதிக்கு பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் அணிகள் தகுதி பெற்றுள்ளது.

21வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடைப்பெற்று வருகின்றன.இதில் நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் முடிந்து,நேற்று முதல் காலிறுதி ஆட்டங்கள் தொடங்கியது.

இதில் நேற்று நடைபெற்ற காலிறுதியில் பிரான்ஸ் அணி,உருகுவே அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தில் முதல் பகுதியில் இருந்து ஆதிக்கம் செலுத்திய பிரான்ஸ் 2-0 என்ற கோல் கணக்கில் உருகுவேயை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது.

இதேபோல் நேற்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியம் அணியும், பிரேசில் அணியும் மோதியது.முதல் பாதி ஆட்டத்தில் பெல்ஜியம் அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னணியில் இருந்தது.இரண்டாவது பாதி ஆட்டத்தில் பிரேசில் அணி வீரர் ரீனட்டோ அகஸ்டோ ஒரு கோல் அடித்தார்.முடிவில் பெல்ஜியம் அணி,2-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

மேலும் படிக்க