• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

YWCA சார்பில் மகளிர் தின கொண்டாட்டம் – 40 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விருது வழங்கி கெளரவிப்பு

March 8, 2025 தண்டோரா குழு

கோவையில் இளம் பெண்கள் கிருஸ்துவ அமைப்பு (YWCA) 103 ஆண்டுகளாக
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பல்வேறு சேவைகளை வருகிறது.அதன் ஒருபகுதியாக ஒவ்வொரு வருடமும் மகளிர் தினத்தை கொண்டாடி வருகிறது.

அந்த வகையில் இன்று மார்ச் 8 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ‘சகோதரத்துவத்தை கொண்டாடுவோம்’ என்ற தலைப்பில் YWCA சார்பில் மகளிர் தின கொண்டாட்டம் YWCA ஹாலில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு வெரைட்டிஹால் ரோடு காவல் நிலைய சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் ஆய்வாளர் மீனாம்பிகை, பந்தய சாலை சி2 காவல் நிலைய போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர் சுவாதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

நிகழ்வில், கோவையை சேர்ந்த
40 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில்,YWCA தலைவர் நிர்மலா சேகர்,நிகழ்ச்சி தலைவர் டாக்டர் ஷேரன் சாம்சன் மற்றும் YWCA உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் ஆய்வாளர் மீனாம்பிகை பேசுகையில்,

ஆண்களுக்கு பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை மனதில் நினைத்தால் மட்டும் போது அதை நம் திறமையில் நிரூபிக்க வேண்டும்.ஆணுக்கும் பெண் நிகர் என்பதை விட அவர்களை விட நாம் ஒரு படி முன் நிற்க வேண்டும் என்று பேசினார்.

மேலும் படிக்க