• Download mobile app
05 Jul 2025, SaturdayEdition - 3433
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஓடிசாவில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுமி மீட்பு

December 26, 2017 தண்டோரா குழு

ஓடிசாவில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 3 வயது சிறுமி, சுமார் 8 மணிநேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓடிஸா மாநிலத்திலுள்ள குலாசார் கிராமத்தை சேர்ந்த தம்பதியின் 3 வயது பெண் ராதா சாஹு,வீட்டிற்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்தாள்.அப்போது அங்கு தோண்டப்படிருந்த சுமார் 50 மீட்டர் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துவிட்டாள். குழந்தையின் அலறல் சட்டம் கேட்ட பெற்றோர்,வேகமாக வீட்டைவிட்டு வெளியே வந்து பார்த்தபோது, ராதா குழிக்குள் விழுந்து இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனையடுத்து காவல்துறைக்கும் தீயணைப்பு துறைக்கும் தகவல் தந்துள்ளனர். தகவல் அறிந்த அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து,அந்த குழிக்குள் கேமரா ஒன்றை அனுப்பி, குழந்தை உயிருடன் இருக்கிறதா? என்று தெரிந்துக்கொண்டனர். குழந்தை உயிருடன் இருப்பதை உறுதி செய்தபிறகு, அதை மீட்கும் பணியில் ஈடுப்பட்டனர்.

இதனிடையே,இச்சம்பவம் சம்பவம் குறித்து ஓடிஸா மாநிலத்தின் “ODRAF” என்ற அமைப்பிற்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே, சுமார் 10 பேர் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுப்பட்டனர். அவர்களுடன் உள்ளூர் மக்களும் மீட்பு பணியில் ஈடுப்பட்டனர்.சுமார் 8 மணிநேர போராட்டத்திற்கு பிறகு, சிறுமி ராதாவை அந்த ஆழ்துளைக் கிணற்றில் இருந்து உயிருடன் மீட்டு உள்ளனர்.

மேலும் படிக்க