July 31, 2018
தண்டோரா குழு
ஆகஸ்ட் 1 ஆம் தேதி சர்வதேச காகித தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு கோவையில் காகித வணிகர் சங்கம் சார்பில் சிறப்பு தபால் தலை வெளியிடப்பட உள்ளதாக கோவை மாவட்ட காகித வணிகர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
“வருடந்தோறும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி காகித தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த தினத்தை கொண்டாடும் வகையில் காகித வணிகர் சங்கத்தினர் பல்வேறு கொண்டாட்டங்களை ஒருங்கிணைத்து உள்ளதாக தெரிவித்துள்ளனர்.இதற்காக அகில இந்திய அளவில் 35 நகரங்களில் இந்த கொண்டாட்டம் நடத்தப்படவுள்ளது.குறிப்பாக இந்த தினத்தில் கோவையில் சிறப்பு தபால் தலையை வெளியிட உள்ள
மேலும்,காகித வணிகர் சங்கத்தின் தலைமையிடமான மும்பையிலும் சிறப்பு தபால் தலையை வெளியிட உள்ளதாகவும் கூறினார்.இதனை மகாராஷ்டிரா முதல்வர் வெளியிட உள்ளதாக தெரிவித்தார்.காகிதம் அதிகளவிலான மரங்களை அழித்து தயாரிக்கப்படுவதாக தவறான கருத்து பொதுமக்கள் மத்தியில் இருப்பதாகவும்,ஆனால் அது தவறான கருத்து என பொதுமக்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாக கூறினார்.
குறிப்பாக 35 % காகிதங்கள் மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதங்களால் தயாரிக்கப்படுவதாகவும், விவசாய கழிவு பொருட்களாலும் காகிதம் தயாரிக்கப்படுவதாகவும் எனவே மரங்கள் இதனால் அழிவதில்லை என கூறினார்.காகித தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் போட்டியும் நடத்தப்பட்டு அதற்காக சிறப்பு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.கோவையில் காகித தினக் கொண்டாட்டங்கள் இந்திய தொழில் வர்த்தக சபையில் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்”.