• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இறந்த குழந்தையின் உடலை பிரிட்ஜில் வைத்த தாய்

December 7, 2017

பெரு நாட்டில் உள்ள மருத்துவமனை இறப்புச் சான்றிதழ் கொடுக்க தாமதமாக்கியதால் குழந்தையின் உடலை வீட்டு பிரிட்ஜில் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரு நாட்டைச் சேர்ந்தவர் மோனிகா பாலோமினோ.இவர் கடந்த டிசம்பர் 2ம் தேதி பிரசவத்திற்காக செர்ஜியோ பெர்னாலேஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை சரியான வளர்ச்சியடையாமல் பிறந்த அந்த குழந்தை இறந்தது.அதன்பிறகு, மோனிகாவை மருத்துவமனையிலிருந்து இறந்த குழந்தையுடன் வீட்டிற்கு அனுப்பிவிட்டனர். அதோடு, இறந்த குழந்தைக்கு தர வேண்டிய இறப்பு சான்றிதழையும் தரவில்லை.

இந்நிலையில் வீடு திரும்பிய மோனிகா, இறந்த குழந்தையை முறைப்படி புதைக்க வேண்டுமென்றால், இறப்பு சான்றிதழ் கண்டிப்பாக தேவை. அதனால், சான்றிதழ் கிடைக்கும் வரை, இறந்த குழந்தையை வீட்டிலிருந்த குளிர்சாதன பெட்டியில் வைத்துவிட்டு, அதன் கதவில் ‘யாரும் அதை தொடக்கூடாது’ என்று எழுதி ஒட்டிவிட்டார்.

இது குறித்து மோனிகா மருத்துவமனை இயக்குநரிடம் புகார் தெரிவித்தார்.இதனையடுத்து பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க