• Download mobile app
04 Sep 2025, ThursdayEdition - 3494
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சட்டப்பேரவை வளாகத்தில் தர்ணா ஏன்? ஸ்டாலின் விளக்கம்

August 18, 2016 தண்டோரா குழு

சபாநாயகரின் சர்வாதிகார போக்கைக் கண்டித்து தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக்கு இன்று வந்த திமுக உறுப்பினர்களை அவைக்காவலர்கள் தடுத்து நிறுத்தினர்.அப்போது திமுகவினர் தாங்கள் எதிர்க்கட்சித் தலைவர் அறைக்குச் செல்லவே வந்திருப்பதாகக் கூறினர்.ஆனாலும் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

இதனையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், துணைத் தலைவர் துரைமுருகன் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை வளாகத்தில் வாயில் அருகே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.சுமார் 2 மணி நேரம் இந்தத் தர்ணா நடைபெற்றது.

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரான என்னை எனது அறைக்குச் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினர்.சட்டப்பேரவைக்குள் செல்லத் தான் அனுமதி இல்லை எனது அறைக்குச் செல்ல அனுமதி உண்டு என்று கூறியும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.எனவே, சபாநாயகரின் சர்வாதிகார போக்கைக் கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டோம்.

மேலும், திமுக ஆக்கப்பூர்வமாகவே சட்டப்பேரவையில் செயல்பட்டு வருகிறது அவையில் இருந்து வெளிநடப்பு செய்ய வேண்டும்,அவையை புறக்கணிக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்ததில்லை. எங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க ஓரிரண்டு சமயங்களில் மட்டும் வெளிநடப்பு செய்திருக்கிறோம்.

சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை பல்வேறு மாநில அரசுகளும் நேரலையாக ஒளிபரப்புகின்றன.அதே போல் தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளையும் நேரலையாக ஒளிபரப்ப வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம்.ஆனாலும்,அது எடுபடவில்லை.வழக்கு நிலுவையில் இருக்கிறது என்று ஏதாவது காரணம் சொல்கின்றனர்.

தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலையாக ஒளிபரப்பினால் மட்டுமே உண்மை நிலைமை தெரியவரும் என்று தெரிவித்தார்.

ஸ்டாலினைத் தொடர்ந்து பேசிய துணைத் தலைவர் துரைமுருகன், தமிழக சட்டப்பேரவை சபாநாயகருக்குச் சட்டம் தெரியவில்லை.எந்தப் பகுதி சபாநாயகர் அதிகாரத்துக்குட்பட்டது என்று அவருக்குத் தெரியவில்லை என்றும் பேரவை மட்டுமே அவர் அதிகாரத்துக்குள் வரும் ஒட்டுமொத்த கோட்டையும் அல்ல.

எதிர்க்கட்சித் தலைவர் அறைக்குச் செல்ல விட மறுத்தது சர்வதிகார போக்கு என்றும் சட்டமன்ற உறுப்பினரைக் கடமையை செய்யவிடாமல் தடுத்ததாக உரிமை மீறல் பிரச்சினையை உருவாக்குவோம் என்றும் தெரிவித்தார்.

மேலும் படிக்க